7/06/2011

ஓம் நமஹ! ஏழைகளின் கல்வி ஸ்வாஹா!!


மாணவர்களே.. பெற்றோர்களே.. ஆசிரியர்களே..

வீதிக்குப் போராட வாங்க.. விலை பேசப்படுது குழந்தைகளின்

எதிர்கால வாழ்க்கை.



நேற்று காலையில் நான் கண்விழித்ததுமே மூன்று விஷயங்கள பற்றி அறிந்து கொண்டு, சற்றே திக்கு முக்காடிப் போனேன். உலகிலேயே இது போன்ற அதிசயமான வினோதமான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமே நடை பெற முடியும் என்பதை அவ்விடயங்கள் சுரீர்ரென எனக்கு உணரச்செய்தது. அவை:


1. என் அக்காளின் குழந்தைகள் இருவர் (வயது : 2, 4) அசோக் நகர் "ஏ ஸ்கூலில்" படிக்குறாங்க. எனக்கு பொதுவாவே 5 வயசுக்கு கீழான குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்கு போறதே புடிக்குறதில்ல.. அது ரொம்ப தேவையானதும் இல்ல.. நம்ம கெரகம் ஒரு வயசுலயிருந்தே போக ஆரம்பிச்சுடுதுங்க.. அந்தளவுக்கு மார்க்கெட்டிங் பண்றானுங்க.. விஷயம் இது தான்: ரெண்டு குழந்தைகளுக்கு இந்த ஆண்டுக்கான கட்டணம் ஒரு லட்சத்தி பதினாராயிரம் ரூபா!!! (அமெரிக்காவின் எந்த ஒரு அதி அற்புதமான பள்ளியின் கட்டணம் கூட இவ்வுளவு இல்லை. தமிழ் நாட்டின் தனியார் பள்ளிகளே உலகின் மிக காஸ்ட்லியான பள்ளிகள்.)


2. என் நண்பனின் தம்பி ஆறாம் வகுப்பு படிக்குறான். அவனது புத்தகத்தில் நான் பார்த்து அதிர்ந்ததில் சில:

சூரிய கிரகணத்தை விளக்கும் படத்தில் சூரியன் இல்லை; பகல் இரவை வெளிப்படுத்தும் படங்களிலும் சூரியன் இல்லை - மறைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் எனக்கு எதுவுமே புரியவில்லை.. அந்த பயலிடம்,


-"என்னடா இது? சூரிய கிரகணத்துல சூரியன் எங்கடா?"

-"புக்கு கெடச்சதே பெரிய விசயம்.. சும்மாயிருண்ணே..."

-"ஏண்டா அலுத்துக்குற?"

-"இத பாரு.."


என்று ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை நீட்டினான்.. அது காந்தத்தின் தன்மை குறித்து விளக்கும் பாடம். கொய்யால!!! காந்தத்தின் வடக்கு தெற்கு துருவங்கள் ஒட்டுமொத்தமா நீக்கப்பட்டிருந்தது.


-"இது என்னதுடா?"

-"வடக்கு தெற்கு துருவம் கறுப்பு செவப்பு கலர்ல இருந்துச்சுல்ல.. அதான் அழிச்சிட்டாங்க.."


(ஐய்யோ!! ராமா!!! இந்த பரதேவதை படுத்துற பாட நெனச்சாலே பத்திகிட்டு வருது.. என்னால முடியல.. வுட்டா சூரியன் வளர்ச்சிய தடுக்குறதுக்கு விவசாயத்தையே நிறுத்தச் சொன்னாலும் சொல்லும் போல, இந்தம்மா.. அய்யாடீ!!! இப்பவே கண்ண கட்டுது. இன்னம் கிட்டதட்ட அஞ்சு வருசம் என்னத்த செய்ய போகுதோ?!)


3. தமிழ் பாட புத்தக அட்டையில் இருந்திருக்கிறது மூன்று விஷயங்கள்.. (1. திருவள்ளுவரின் படம்; 2. "யாதும் ஊரே யாவரும் கேளிர்.." ; 3. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..") மூன்றையுமே முழுவதுமாக மறைக்கும் விதத்தில் ஒரு பச்சை கலர் தாள் ஒட்டுங்கள் என்று ஆசிரியர்களுக்கு கட்டளையாம். அதற்கு "முடியவே முடியாது.. கிழிக்குறதும் ஒட்றதும் என் வேல இல்ல.. திருவள்ளுவர மறைக்க மாட்டேன்.. நீ முடிஞ்சத பன்னிக்கோ.." என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள், புரசைவாக்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள். (!!!)


இனி கட்டுரைக்கு செல்வோம்:


கிட்டதட்ட எல்லா முன்னேறிய/ முன்னேறும் நாடுகளிலும் இதுவே நடைமுறையில் இருக்கிறது:


1. பொதுக்கல்வி

2. தாய்மொழியில் கல்வி

3. பொதுப்பாடத் திட்டம்


இம்மூன்றையும் நடைமுறைப்படுத்த எத்தனித்து ஆரம்பித்தது தான் இந்த சமச்சீர் கல்வி. முதற்க்கட்டமாக 'பொது பாடத் திட்டம்' என்கிற அளவிலாவது நடைமுறையாகிறதே என்ற அளவில் வரவேற்கப்பட்டது சமச்சீர்க் கல்வி.


ஆசிய அளவில் மிக முக்கியமான கல்வியாளர்கள், அனுபவமிக்க ஆசிரியர்கள், கல்வி வல்லுனர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டமே சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டம். 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஓராண்டுக்கும் மேல் உழைத்து (உண்மையாகவே உழைத்து) தயாரித்த நூல்கள் இவை. இவை அதி தரமானவை என அனைத்து உண்மையான கல்வியாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இதை ஓரளவுக்கு வீரியத்துடன் செயல் படுத்த ஆவன செய்தது கடந்து போன தி.மு.க. ஆட்சி. தொடர்ந்து, சமச்சீர்க் கல்வி மூலமாக பொது பாடத் திட்டம் (அதாவது இனி இந்த ஸ்டேட் போர்டு சிலபஸ், மெட்ரிக்குலேசன் சிலபஸ்ங்குற பாகுபாடே இல்லாமல் அனைவருக்கும் ஒரே கல்விக்கான பொது பாடத் திட்டம்) இந்த கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என முந்தைய அரசு ஆணையிட்டிருந்தது. இதற்காக 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு ஒன்பது கோடி பாட நூல்களும் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.


இந்த எடத்துல தான் ஒரு பெரிய டிவிஸ்டு: ஆட்சி மாற்றம்: செல்வி.ஜெயலலிதா முதல்வர்: சமச்சீர் கல்விக்கு ஆப்பு!


மெட்ரிகுலேஷன் தான் உயர மேலே நிக்கனும்.. சமமா சீரா இருப்பது அவாளுக்கு ஒவ்வாது.

ஷ்பஷ்டமா சொன்னா, 'சமம்னாலே அவா மடி கலஞ்சிடும்'. அதனால தான் அம்மா, பத்துல ஏழு பேர "அவாளா" பாத்து சமச்சீர் கல்வி குழுவுல போட்ருக்காங்க..


பத்மா ஷேஷாத்ரிக்கும், டி.ஏ.விக்கும் அஹ்ரஹாரம் உய்யத்தான் வழி தெரியும்.. அண்ணாடங்காச்சிய தெரியுமா??!!


அவாளுக்கு தமிழே நீஷ பாஷெ.


ஆங்கிலம்னா தேனா இனிக்கும்; தமிழ்னா தேளா தீண்டும்.


அப்பவே, குல்லுகப்பட்ட இராஜாஜியின் "குலக் கல்வித் திட்ட"த்த பெரியாரும் காமராஜரும் முறி அடித்தனர். இன்றைய கல்விக் கொள்ளையர்களும் மெட்ரிகுலேசன் முதலாளிகளும் பார்ப்பணர்களின் சேர்ந்து நடத்தும் கூட்டு சதி முறியடிக்கப்படும் நாள் தூரமில்லை.


சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை எதிர்க்காத சட்டமன்ற உறுப்பினர்களே, எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்திக்க போகிறீர்கள்??


(எதிர்க் குரல்: அதெல்லாம் நாங்க இலவச லேப் டாப் கொடுத்து கரெக்ட் பன்னிடுவோம்)


இதுக்கு ஒன்னும் கொறச்சலில்ல.. பவ்வியமா கைய கட்டிக்கிட்டு கூனி குறுகி பதுங்கி கிட்டு என்னம்மா நிக்குறாய்ங்க?! எங்க எது கெடைக்கும் எந்த சொம்ப அடிச்சுக்கிட்டு ஓடலாம்னு திறுதிறுன்னு முழிக்குறதுலேயே நல்லா புரியுது இவுக நமக்கு யாருன்னு. பொழச்சுட்டு போங்க வேணாங்கல்ல.. நம்ம புள்ளங்க தலையிலயே மண்ண போடறதயும் வேடிக்க பாக்குறீங்களே?!


அது மட்டுமா?! இஸத்தை பறக்கவிட்ட இடதுகளும் வலதுகளும் கூட சமச்சீர விட்டுட்டு சாமரம் வீசுது.


தமிழக மக்களை ஏமாற்ற, கச்சித் தீவை மீட்க, சிறீலங்கா மீது பொருளாதார தடை என்ற ஏட்டுத் தீர்மாணங்கள் கறிக்கு உதவாது.

இது வெத்து புஸ்வானம்.

அவா சொல்றது வேற, செய்றது வேறன்னு நமக்கும் புரியும், ராஜபக்ஷேவுக்கும் தெரியும்.

சாமி, சோ, மேனன் - சானக்கியம் புரிஞ்சிகிட்டு, ஆரிய சூட்சமத்துக்கு அழகா ஒத்துழைத்து ஈழ விடுதலைய ஒத்தி வைச்சுட்டான் ராஜபக்ஷே.

ஆனா, அம்மாவோட வெத்து சட்டமன்ற தீர்மாணத்துக்கே, ஈழத்தை லீஸ்ஸுக்கு எடுத்து தமிழ்நாட்ல ரியல் எஸ்டேட் பன்ற நம்ம ஆளுங்க, அம்மா "விடுதலை"யே வாங்கி கொடுத்த மாதிரி ஜால்ரா என்ன? விசில் என்ன? குதியாட்டம் என்ன?


என்னத்த சொல்ல?!

பலருக்கு ஈழமே பொழப்பாயிடுச்சி.

அவுங்களுக்கு சமச்சீருன்னா 'வேஸ்ட் சப்ஜெக்ட்'.


குமரி வள்ளுவர் சிலை வாஸ்து படி இல்லேன்னு ஒடைக்கட்டும்..

தி.மு.க.வையே அறிவாலயத்த விட்டு அந்தமானுக்கு வெரட்டட்டும்..

புதிய தலைமை செயலகம் என்ன?! கத்திபாரா, ஜெமினி, வள்ளுவர் கோட்டத்த கூட ஒடச்சு நெரவட்டும்..

அம்மா!!! தாயே!!!

உங்க பங்காளி சண்டையில எங்க கொழந்தைங்க தலையில மட்டும் கைய வைக்காதீங்க..

கல்வியும் இடஒதுக்கீடும் கழகங்களுக்கு மட்டும் சொந்தமில்லை தாயே.


சமச்சீர் பொதுக் கல்வி எம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை.

சமச்சீர்க் கல்வி - ஓர் சமூக நீதி.

பொதுக் கல்வித் திட்ட நடைமுறையை ஒத்திப் போடுவது அல்ல.. ஒழித்துக் கட்டுவதே அவா சதி.

இது வெந்தாடி வேந்தன் பண்படுத்திய பூமி. இங்கு சமூக நீதி அழிக்க யார் வந்தாலும் ஈரோடு பூகம்பத்தில் அழிவது வரலாறு.

8 comments:

drrsk1974 said...

i agree with every thing except for one thing ..that is content of the book is very bad below , if our study this book iam sure all india toppers numbers will come down, iam writing this after reading 10 std samaser kalvibooks

அருண் பிரபு said...

i dont think so.. me too ve seen the 10th std syllabus.. its far betta than the CBSE.. its simple.. non complicated.. and needful of that age without any sort of complex ideas. :) :) and the main issue is the SAME SYLLABUS FOR EVERYONE than the DIFFERENT STANDARDS OF SYLLABUS FOR DIFFERENT PEOPLE..

Prabu Krishna said...

இதற்க்கெல்லாம் மக்கள் போராட மாட்டார்கள் நண்பா. மெட்ரிகுலேஷன் கட்டணம் அதிகம் என்றால் மட்டுமே போராடுவார்கள்.

Prabu Krishna said...

Remove Word Verification for comments

Dashboard--->
Settings--->
Comments---> Show word verification for comments? For this select as "NO"

Anonymous said...

சமுதாயம் தெளிவடைய வேண்டும்..அருமையான கட்டுரை...

அருண் பிரபு said...

@ பலே பிரபு: நன்றிண்ணா.. :) :) :)

அருண் பிரபு said...

@ படைப்பாளி: ஹ்ம்ம்.. நன்றிண்ணா.. :) :) :)

Prabu Krishna said...

அட நான் உங்கள விட சின்னவன்ங்க... பிரபுன்னே கூப்பிடுங்க