6/23/2011

திருவடி சரணம்.



(குத்தீட்டி ஒன்று குத்துகிறது இதயத்தில்)

இரண்டு நாட்களாய் வலை முழுவதுமே சாருவின் செக்ஸ் சாட் பற்றிய திட்டுக்களே. எதார்த்தமாக செக்ஸ் சாட் செய்து மாட்டிக் கொண்ட சாருவை, ஃபேஸ் புக்கில் திட்டுவதன் மூலம் நம்ம 'ஃப்ரெண்ட் லிஸ்ட்டில்' இருக்கும் ஏதாவது ஒரு சுமார் ஃபிகராவது 'லைக்' கொடுக்காதா என்ற ஏக்கத்துடன் அலைகிறார்கள் "இலக்கிய தேடல்" ஏகும் ஆண் வலை நண்பர்கள். "டபுள் லைக்" கொடுக்கிறார்கள் பெண்கள். என்னத்த சொல்ல?

ஃபேஸ் புக், இண்டர் நெட், ப்ளொக் ஸ்பாட், கதை, கவிதை, கட்டு
ரை - எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் எழுதி தீர்த்துவிட்டார்கள். புதிதாய் சொல்ல எதுவும் இல்லை. எழுத்தையே கலையாக, காசாக்கி ஜீவனம் செய்பவர்கள் கூட, எழுத்தை ஆள முடியாமல் தவிக்கும் நிலை. எங்கேயோ படித்தது, எங்கேயோ மறந்தது, எங்கேயோ சுவைத்தது, எங்கேயோ கொரித்தது. எல்லோரும் சொல்லவும் எல்லோரும் எழுதவுமான கணிணி வலையில் சிக்கி நிலை தடுமாறும் நிலையில்..

இன்று:
குத்தீட்டி ஒன்று குத்துகிறது இதயத்தில்.
காட்சியின் கோரத்தில் திடுக்கிட்டு மடிகின்றேன்.
உறக்கத்தைக் கெடுக்கும் உள்ளத்தின் வலி, ஆராது ஆராது; அழுதாலும் தீராது.
சொன்னால் துக்கம்; சொல்லாவிடில் இறுக்கம் - இரட்டை நிலை.
காலத்தின் கட்டாயமாய், இனத்திலே பிறந்த இழிமை.
ஏது சொல்ல? ஏதும் இயலா கையறு கயவனாய், நான்.
முள்ளி நிகழ்விற்கு பிறகு, இன்றும் அடங்க மறுக்கிறது - ரத்த கொதிநிலை.
சாந்தமும் அமைதியும் கொதி நிலையில் குழைந்து மறைகிறது.
எனக்குரிய பொறுப்பிற்காய், என்னை நசுக்குகிறேன்; இயல வைக்க திணருகிறேன்.
எல்லா யன்னலைகளையும் மூடி விட்டேன். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டேன்.
மின்மினியாய் ஒளிரும் டி.வி. சிக்னலை அழுத்தி அணைத்தேன்.
குருட்டு பூனையாய் இருட்டிலே ஒடுங்குகிறேன்.

சம்மட்டி அடியாய் தலை வலி பிளக்கிறது.
என்னை விடுங்கள்.
என்னிடம் யாரும் பேசாதீர்கள்.
எவருக்கும் என்னிடம் வேலை இல்லை.
அனைவரும் இருந்தும் பலி கொடுத்து விட்டீர்கள்.
அருகில் வராதீர்கள்.
ஓடுங்கள், எல்லோரும்.
உங்களைப் போல கேடான மனிதர் உலகில் இல்லை.
ஏன் வெறுக்கின்றேன்?
ஏன் விரட்டுகின்றேன்?
எதை இழந்த போதும் இவ்வுளவு குமுறியதில்லையே.
என் தாயை இழந்தால் கூட, இது அளவு வெடித்து சிதற வாய்ப்பில்லை.
காடு மேடு சொந்தம்; காணும் யாவும் சொந்தம்; கூடும் இல்லை; குஞ்சம் இல்லை.
அழுது அழுது கதறி என்ன? எவ்வித விடிவிற்கும் முடிவிற்கும் தெளிவில்லை.

கழுகும் ஒதுக்கிய பிணங்கள்;
நாயும் வெறுத்த கவுச்சி;
கருகி உருகி கூழாய் சிதைந்த உருவங்கள்;
இயற்கை நிகழ்வு அல்ல - இது மாந்தம் கொன்ற செயற்கை சதி.

முள்ளிவாய்க்கால் - நம் தலையில் விழுந்த பேரிடி;
அதுவே நம் தலைமுறைக் காப்பாற்றும் திருவடி.

உலகப்போர்கள் காணா கொடுமைகள்;
ஹிரோஷிமா நகசாகி சொல்லாத காவுகள்;
ரவுண்ட்ஸ், ஷெல், கிவிர், எரிகணை, பொஸ்பொரஸ், கொத்து... சில பலியாயுதங்களின் பெயர்கள் கூட தெரியவில்லை.
ஆயிரமாயிரம் இரத்தச் சாட்சிகள்.
மனிதம் மறித்த முள்ளி மணல் திட்டில், எந்த இறை மயிருக்கும் முகவரி இல்லை.

அழிவுக் கணைகளால் அழித்தன உலகக் கரங்கள்.
ஊருக்கு இளிச்சவாயன் அல்ல; இன்று உலகத்திற்கும் இளிச்சவாயன் - தமிழன்.
நாடு தோறும் பஞ்சையாய் பராரியாய் மட்டுமல்ல, நாடற்ற இனமும் நாமே.
கூட்டணி சாணக்கியம் தேர்தலுக்கு மட்டுமல்ல, போருக்கும் அது தான் என்று தெரிந்தும், இயலவில்லை.

எம்மைக் கண்டும் காணாத இனத் துரோகிகளே..
உங்கள் முகவரிகள் வரலாற்றில் என்றும் இழிவாய் நிலைக்கும்.
நாம் யாரையும் நோவதும், வேவதும் வீண்.
அவரவர் செய்வினை - அவரவர் தொடர்ச்சி.

உறங்கும் கண்களின் இமைகளைத் திறவுங்கள்.
உலகத்தின் பார்வைக்கு நம் நிலைக் காட்டுங்கள்.
அடுத்தக் கட்டத்திற்கு ஆழ்ந்து நகருங்கள்.
சூழ்நிலை புரிந்து சூதானம் தேவை.
எல்லாவற்றிக்கும் இறுதி உண்டு - தொடக்கத்திற்கென்று முடிவும் உண்டு.
மாற்றம் ஒன்றே மாறாதது.
நினைவில் இருக்கட்டும்:
காலம் என்பது கறங்கு போல் சுழன்று, மேலது கீழாய் மாற்றும் தன்மையது.



(கருத்தில் திருத்தம் இருந்தால் உதவுக)

3 comments:

Prabu Krishna said...

//ஊருக்கு இளிச்சவாயன் அல்ல; இன்று உலகத்திற்கும் இளிச்சவாயன் - தமிழன்.//

உண்மைதான் நண்பா.

அருண் பிரபு said...

@ பலே பிரபு : உங்களது பேரே எனக்கு வாழ்த்து தான். நன்றி நண்பா.. :)

Sathya Mariappan said...

உண்ணாவிரத நாடகம் நடத்திய தலைவன் அரியணையில் இருப்பதை வேடிக்கை பார்த்தேன்...
இன்று,
ஏட்டு தீர்மானம் கொண்டுவந்த தலைவி அரியணையில் இருப்பதையும் வேடிக்கை பார்க்கின்றேன்...
வேறு வழியில்லை....
என்னையும் சேர்த்து விடுங்கள்., தமிழின துரோகிகள் பட்டியலில்....