6/11/2011

சன் மியூசிக்கில் வரும் பாடல்களில் என்ன பிரச்சனை?!



தமிழ் சினிமாவின் இசைதான், பொதுவாக தமிழ் மக்களின் இசையாக கொண்டாடப் பெறுகிறது. அவ்வாறே, தமிழ் சினிமா பாடல்கள்தான், பொதுவாக தமிழ் மக்களின் கவிதைகளாக/பாடல்களாக கொண்டாடப் பெறுகிறது. நம்மில் பெரும்பாலானோர் தமிழச்சியின்/மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை கொண்டாடுவதைக் காட்டிலும், சன் மியூசிக் மற்றும் இசையருவியில் வரும் நா.முத்துகுமார், மதன் கார்க்கி, பா.விஜய் போன்றோரையே ரசிக்கிறோம்.
தனிப்பட்ட முறையில், என்னால் தமிழ் சினிமா பாடல்களின் வரிகளை அதிகமாக ரசிக்க முடிவதில்லை. காரணம், அனேகமான பாடல்களில் சாதாரணமான மனித வாழ்வியல் தத்துவங்கள் இடம் பெறுவதாக தெரியவில்லை. பொதுவாகவே காதல் மற்றும் காமத்தினை பற்றி எழுதுகிறார்கள். மனித நேயமற்ற, உணர்வுகளற்ற, எவனென்றே தெரியாத ஒருவன் வாசிச்சதை, காப்பி அடிக்கப்பட்டு உருவாக்கப்படற, நாராச சப்த
ங்களாலேயே நிரப்பப்படிகின்றன, தற்பொழுதைய தமிழ் சினிமாவின் முக்கால்வாசி இசை. அதேபோல, உதவாத உவமைகளாலேயே நிரப்பப் படுகின்றன, தற்பொழுதைய தமிழ் சினிமாவின் முக்கால்வாசி பாடல்கள்.
உவமைகள் புரிய வைப்பதற்காக பயன்படுத்தப் படும் போது மட்டுமே, அதை சகித்துக் கொள்ள முடிகிறது. புரிய வைப்பதற்காக அன்றி, உவமையின் அழகிற்காகவே, உவமை பெரும் பாலான பாடல்களில் இடம் பெறுகிறது. ஒரு கலைப்படைப்பின் அழகு அதன் பயன்பாட்டின் மூலமாகவே அளவிடப்படும்.
எதை நாம் அழகு என்கிறோம்? எதை நாம் அழகியல் என்கிறோம்? நமது மனது அப்பட்டமான வியக்கத்தக்க நுன்னிய உண்மைகளை தெரிந்து கொள்ளும் போது - பரவசப்படுகிறது.. உணர்வு கொள்கிறது. அவ்வித உணர்வுகளே ரசனையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ரசனைகளின் கூட்டு, பிறகு அழகியலாகிறது. எனவே, ஒ
ரு கலைப்படைப்பின் அழகென்பது படைப்பு வெளிப்படுத்தும் உணர்வைக் காட்டிலும், அப்பட்டமான உண்மை சார்ந்ததாகவே இருக்கிறது.
அழகு என்பதே உண்மை சார்ந்த விஷயமாக இருக்கும் போது, முட்டாள்தனமாக நாமெல்லாம் - கலை என்பது பொய்களால் நிரம்பபெற்றதாகவும், அதீத கற்பனை சக்தி பெற்றவனே நல்ல கலைஞன் என்றும், பொய்யை வெளிப்படுத்துவதே அழகென்றும், அதீத எதார்த்தமற்ற உணர்வுகளின் வெளிப்பாடே அழகிய கலை என்றும், கவிதைக்கு பொய் தான் அழகு என்பது போல ஒரு மிக தவறான பார்வையை ஒரு சேர பின்பற்றுகிறோம்.
அதை கண்மூடித்தனமாக பின்பற்றுவதனாலேயே, நம்மால் காலம்காலமாக அதே நிலாவையும், வண்ணத்து பூச்சிகளையும், பூக்களையும், கூந்தலையும், மேகத்தையும், சூரியனையும், பெண்ணையும், காதலையும் இழுக்காமல் கவிதைகள் எழுதவே முடிவதில்லை.
மனதில் இயற்க்கையாக வெளிப்படுத்த நினைக்கும் வார்த்தைகளை நாம் கவிதைகளில் பயன் படுத்த தயங்குகிறோம்.. ஏதோ வாங்குற நாப்பதாயிரம் அம்பதாயிரம் பணதுக்கு சடசடன்னு ஹிட் ஆகுனுங்கிற நம்பிக்கையோட மிக கொறஞ்ச நேரத்திலேயே எழுத தள்ளப்பட்டிருக்கிறார்கள் நமது பாடலாசியர்கள். நமது பாடலாசிரியர்கள் பாவப்பட்டவர்களே. இப்போதைய பாடலாசிரியர்களுக்கு முன்பைக் காட்டிலும் போட்டிகள் அதிக
மாகிவிட்டன. எனவே, வணிக ரீதயாக வெற்றிப் பெறுவதற்கும், பாரிய அளவில் பிரபலமாவதற்கும் ஏற்ப்புடைய பாடல்களாகத்தான் அவர்கள் எழுத வேண்டியுள்ளது.
ஒரு பிரபலமான இசை அமைப்பாளன் ஒரு பாடலுக்கு வாங்குவதில் நாற்பதில் அரை மடங்கு சம்பளம் கூட ஒரு பிரபலமான பாடலாசிரியனுக்கு கொடுப்பது இல்லை. ஒரு பாடலாசிரியனுக்கு தோராயரமாக 3 அல்லது 4 நாட்களே கொடுக்கப் படுகின்றன. இங்கு கெட்ட பாடல்களைக் காட்டிலும் கெட்ட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இவ்விதபோக்கில், திறம் மிக்க நல்ல இசையும் அரிதாகி விட்டது; மனிதர்களுக்கு அவசியப்படும் வாழ்வியல் தத்துவங்களும் அரிதாகி விட்டது.
பொதுவாகவே தத்துவம் என்றதும் வாழ்வு பற்றிய புலம்பல்களாகவே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். தத்துவத்திற்கும் புலம்பல்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. நம்முடைய தத்துவம் எம்பது, நாம் தத்துவம் எனக் கூறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவது இல்லை; மாறாக அது நாம் தேர்வு செய்யும் விஷயத்தினால் வெளிபட்டுத்தப்படுகிறது; நமது தேர்வு வாழ்வின் மீதான நமது பொறுப்புணர்வு சார்ந்தது.
இங்கு, நமது இப்போதைய தமிழ் சினிமாவில் தத்துவார்த்தங்கள் வெளிப்படும் பாடல்கள் இல்லாமலேயே போய் விட்டதாக தோன்றுகிறது. அவ்வப்போது, ஏதேனும் ஒரு சில வரிகள்.. அவ்வளவே. சமீமத்தில் வெளிவந்ததில் "தமிழ் எம்.ஏ.," , "புதுபேட்டை", "ஆயிரத்தில் ஒருவன்", "நான் கடவுள்", "அது ஒரு கனா காலம்" போன்ற வெகு சில சினிமாக்களின் பாடல்களில் மட்டுமே தெறித்ததது, சாதாரண மக்களுக்கான எளிமையான, எதார்த்தம் மீறாத உண்மை நிறைந்த தத்துவங்கள்.
இருப்பினும், ந
மது தத்துவப்பாடல்கள் அனைத்துமே சோக கீதங்களாக அமைக்கப்படுவது, ஒரு தவிர்க்கமுடியாத ஒரு விதி போல பின்பற்றப்படுகிறது. உண்மையில் தத்துவங்கள், உண்மையை சார்ந்த தேடல்களின் விளைவுகள். அது மிகவும் சுவாரஸ்யமானது; அனுபவப்பூர்வமானது; மிக முக்கியமாக நகைச்சுவை மிக்கது. எந்த தத்துவங்களும் ஒரு சிறு சந்தேகத்தின் தொடர்ச்சியாகவே கண்டு பிடிக்கப் படுகிறது. அந்த பயணம் மிக நையாண்டித்தனமானது. ஆனால், நமது சாபக்கேடு- நமக்கு, சாதாரண மனித வாழ்வியல் தத்துவங்களை நகைச்சுவையுணர்வோடு பதிவு செய்யும் பாடலாசிரியர்கள் மிகவும் சிலரே வாய்த்திருக்கிறார்கள். அதில், ஒப்பற்றவர் - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். மிக குறுகிய அறிமுகத்தை ஏற்படுத்தும் எடுத்துக் காட்டு பின்வருமாறு:

குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்கு சொந்தம்!
குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டு கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி
பார்க்
கபோனால் எட்டடிதான் சொந்தம்!
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்?
உலகத்துக் கெதுதான் சொந்தமடா?!
மனகிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதி மந்தமடா!

செவரு வச்சுக் காத்தாலும், செல்வமெல்லாம் சேர்த்தாலும்,
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தகாரன் யாரு?
நீ துணிவிருந்தா கூறு!

ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்க போனார் பாரு! அவரு
எங்க போனார் பாரு!!
பொம்பள எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணா - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்.!!
*******

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங்
கூட்டிருக்குது கோனாரே! இதை
ஓட்டி ஓட்டி திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே!!
கணக்கு மீறி தின்றதாலே கனத்த ஆடு சாயுது- அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது..
பணக்கிறுக்குத் தலையிலேறி பகுத்தறிவுந் தேயுது- இந்தப்
பாழாய் போன மனிதக்கூட்டம் தானாய் விழுந்து மாயுது..
ஆச என்ற பம்பரத்த உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு..
இத படித்திருந்தும் மனக்குரங்கு பழைய கிளைய பிடிக்குது,
பாசவலையில் மாட்டிகிட்டு வௌவால் போல துடிக்குது..
நடக்கும் பாதை புரிந்திடாமல் குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப் பானை போன்ற வாழ்வை துடுக்குப் பூனை ஒடைக்குது.
*****

நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடுவிலிருக்கும் சாமி - நீ
கல்லாய்ப் போன காரணத்த எல்லாருக்கும் காமி!
******

முடியிருந்தும் மொட்டைகளாய் மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய் விழுந்துகிடக்க போறீங்களா?
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகள எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க? என்ன பண்ணிக் கிழிச்சீங்க?!
********

ஆடி ஓடி பொருளத்தேடி, அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்..
அதிலே இதிலே பணத்தைச் சேத்து வெளியிட பயந்து மறச்சுவைப்பான்..
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை ஆருக்கும் சொல்லாம பொதச்சு வைப்பான்..
ஆகக் கடைசியில குழிய தோண்டி -
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்.
********

நல்ல வழியில வாழ நெனச்சு நாயா அலையாத - அது இந்த
நாளில் முடியாதே..
நரியப் போலே எலியைப் போலே நடக்க தெரிஞ்சிக்கனும்- தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு! உள்ளம் அழுக்குங்க - அதுலேதான்
உலகம் கெடக்குங்க - இது உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்ல - உள்ளத சொன்னா குத்தமில்ல.
********
கடைசியாக,
மிக வலிமையான மொழியியல் ஆளுமையைக் காட்டிலும், மிக நுன்னியமாக உணர்வுகளை வெளிக்காட்டுவதைக் காட்டிலும், ஹிட்டாகக் கூடிய வினோத சப்தம் நிறைந்த வார்த்தை வித்தைகளைக் காட்டிலும் - அப்பட்டமாக எழுதக்கூடிய சாதாரணக் கவிஞர்களே இப்போதைய தமிழ் சினிமாவின் தேவையாக தோன்றுகிறது. கவிபேரரசுகளைக் காட்டிலும், வித்தக கவிஞர்களைக் காட்டிலும், மக்கள் கவிஞருக்கான அவசியமே அதிகமிருப்பதாக தோன்றுகிறது.
ஏனெனில், உண்மை மட்டுமே அழகானது. ருசிக்கத்தக்கதும் கூட.

5 comments:

drrsk1974 said...

nice arun wellsaid super, wil u impliment this in u r next movie when u hold mega phone?

drrsk1974 said...

drrsk1974 is sureshkumar raju ,,,ok arun

அருண் பிரபு said...

@ drrsk1974: i will sir. wot else i can do other than that..?!

abhi said...

its a great job...... u refreshed pattukottai kalyana sundaram fter a lng tym.....

அருண் பிரபு said...

oh!! thank u abhi :) :) :)