6/03/2011

பழைய புத்தகக் கடையில்..

மனதில் தைத்த சில கவிதைகள்:

எடைக்குப் போடப் பட்ட எண்ணங்களின் குவியல், பழைய புத்தக கடைகள். 5 ரூபாயில் 100 ரூபாய் புத்தகம் கிடைக்கும். சமீககாலமாக பாடநூல்களே அதிகம் தென்படுகிறது. எனினும், கவிதை புத்தகங்களுக்கு பஞ்சமே இருக்காது. 5 புத்தகங்களை 25 ரூபாய்க்கு வாங்கினால், அதில் கண்டிப்பாக நாலே முக்கால் புத்தகங்களாவது படு மொக்கையாக இருக்கும். மீதமுள்ள மிச்சமீதியில் ஒன்றிரெண்டு கவிதைகள் மட்டுமே மனதை நெருடும். பொதுவாக மலத்தில் அரிசி பொறுக்கும் கதையாக இருந்தாலும், சமயத்தில் அரிசியில் கல் நீக்கும் அற்புதமும் அவ்வபோது நடக்கிறது.

இருந்தும், இவ்வித தேடலை தொடர்வதற்கான காரணங்கள்:

1. பொதுவாகவே, நான் கவிதைகளை காட்டிலும் உரைநடையையே பெரிதும் விரும்புகிறேன். நுட்பத்தையும் நுன்னியத்தையும் வெளிப்படுறதுக்காக முக்கி முக்கி புனைவா எழுதப்படற கவிதை தொகுப்புக்கு காசு செலவு பன்றதக் காட்டிலும், உண்மையா எழுதப்படற சாதாரண கட்டுரை புத்தகங்களும், கதைகளும் தான் என் இஷ்டம்.

2. உயிர்மை, காலச்சுவடு, தீரானதி, கணையாழி போன்ற நமது இலக்கிய இதழ்களில் வரும் பெரும்பாலான கவிதைகள் எனக்கு சுத்தமாக புரிவதில்லை. பிரபஞ்சதின் நுனியில் இருந்தபடி, ஆளுமை சேர்த்து, பிரக்ஞை சுழித்து, இருண்மை தவிர்த்து... கொய்யால பொறுமையா நாலு அஞ்சு தடவ படிச்சுப்பாத்தாலும் ஒரு ______ம் புரியரதில்லை.

3. அட்ட பக்கத்தில் ஒரு புரியாத அழகிய நவீன ஓவியம். உள்ளார, ஒரு பக்கத்துக்கு (பக்கத்துக்கு கீழ சின்னதா ஒரு வரிக்கு ஒரு வார்த்தயா) 4 வார்த்தை. மொத்தம் 70 பக்கம். கவித தொகுப்புல மொத்தமே 200 - 300 வார்த்த தான் இருக்கும். விலை : 95 ரூபாய். (நம்மல பாத்தா ரொம்ப மக்கு மாதிரி தெரியுதோ?!)

4. பழைய புத்தக கடையில் நான் வாங்குபவை அனைத்தும், அங்கீகாரமுள்ள நல்ல கவிஞர்களின் புத்தகங்கள் கிடையாது. முற்றிலுமாகவே ஆர்வக்கோளாற்றில் அவதரித்த மழலைகள் தான். மழலைக்குரிதான வசீகரமும் முட்டாள்தனமும் மேதமைகளிடம் கிடைக்காது. மேலும் மழலைகளின் விலை வெறும் 5 ரூபாயில்.

என் நெஞ்சில் தைத்த சில வரிகளை எனது நண்பர்களாகிய உங்களுடன் பதிவிடுவதும் வாழ்த்துரைதான்:



எங்கள் சகோதரிகள்

கற்ப்பழிக்கப் படுகின்றார்கள்

எங்கள் சகோதரர்களின்

தலைகள் வெட்டப்படுகின்றன

இனப்படுகொலைகள்

தொடர்கின்றன.

தலையிடுங்கள் எனக் கேட்டால்

அவர்களது உள்நாட்டு பிரச்சனையில்

நாம் தலையிட்டால்

வல்லரசுகள்

சும்மா இருக்காது என்கிறார்கள்

அது சரி

அப்படியானால்

கடோற்கஜ உருவில்

இங்கே நாம்

ஏக இந்தியாவாக இருப்பது

பிறகென்ன

கோழிமுட்டையில்

புல் புடுங்கவா?



*****



வெள்ளையன் வந்தான்

அடக்கினான்

அடங்கினோம்

ஆண்டான்.



பிரஞ்சுகாரன் வந்தான்

அடக்கினான்

அடங்கினோம்

ஆண்டான்.



முகம்மதியன் வந்தான்

அடக்கினான்

அடங்கினோம்

ஆண்டான்.



இது இந்த தேசத்தின்

வரலாறு.



இன்னும் எந்த

நாய் கழுதை வந்திருந்தாலும்

அடக்கியிறுக்கும்

அடங்கியிருப்போம்

ஆண்டியிருக்கும்



இந்த லட்சணத்தில்

இந்த தேசம்

எப்போதும்

கொதித்து கொண்டிருப்பத்உ போலவும்

அந்தக் கொதிப்பை

அடக்காவிட்டால்

சர்வநாசம்

வந்து விடும் போலவும்

அகிம்சை அகிம்சை

என்கிறீர்களே

இந்த கதாகாலட்சேபம் எதற்கு?



சமூக கோபம் என்பதே

சவமாகி போன இந்த மண்ணில்

சவமானது போக,

மிச்சம் மீதியிருக்கும்

சவலைகளையும்

சவடால்களையும் கூட

சவமாக்கிடும் நோக்கமா?

போதும் நிறுத்துங்கள்.

. இறைவன் -

******

குரங்குக்கும் கோவில் கண்டோம் - தேங்காய்

குடிமிக்கும் தெய்வம் கண்டோம் - சொறி

சிறங்கு பயலையும் சாமி என்றால்

சீவதம் உய்வதெந்நாள்?

மொட்டையே அடித்தடித்து மண்டையில் மயிரு போச்சு

மொட்டையில் வெயிலடித்து மூளையும் கருகி போச்சு

பட்டியில் ஆடு போச்சு

பணங்காசு தானும் போச்சு

வட்டிக்கு பணங் கொடுத்தோன்

வாசலில் நின்ற போது

கட்டிய தாலியிலே

கயிறு தான் மிச்சமாச்சு.



கெட்டு நாம் போன பின்னும்

கீழென ஆன பின்னும்

இட்டிடும் கல்லை தொட்டு

இன்னுமா வணங்க வேணும்?

-துளசிதாசன்.



*****



காணி நிலம்

முப்பாட்டனிலிருந்து அப்பன் காலம் வரை

மும்மாரி பெய்த மழையில்

முப்போகம் தந்து களைத்து போன

காணி நிலம்

எங்கள் வாழ்வில்

விற்றும் அடகு வைத்தும்

அரபு நாடுகளுக்கு பயணச் சீட்டாகவும்

நகரத்து பனியன் கம்பெனிக்கு

புதிய வழிகாட்டியாகவும்

அக்கா தங்கைக்கு சீர் வரிசையாகவும்

அவதாரம் பூசி கரைந்து போகிறது

காணி நிலம்.

. லட்சுமணன்.

*****



நாளைய போர்களத்திற்கு

போர்களத்தில் உங்களால்

பறிக்கப்படும் எங்கள் உயிர்களை

நாங்கள் புதைத்திருக்கிறோம்

அல்லது எரியூட்டுகிறோம்.

அவர்கள் ஆன்மா

எங்களோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நீண்ட நேரம் நாங்கள்

உறங்கும் கணத்தில்

எங்கள் பிடறியில் பலமாக தட்டிகிறது.

நாங்கள் சிந்திப்பதை நிறுத்தும் கணத்தில்

எங்களுக்கு நினைவூட்டுகிறது,

எங்கள் சுதந்திரத்தை.

அவர்களின் அர்த்தமற்ற

உயிர்பறிப்புகள்...

எங்களை இன்னும் வீரமாக்குகிறது

நாளைய போர்க்களத்திற்கு.

.லட்சுமணன்.

*****

இப்படியாய் யாவரும்



முதல் சந்திப்பில்

வார்த்தையின் ஊடே.

ஊர் வரை நுழைந்து

சாதியின் பெயரை

நாசூக்காக கேட்டறிவதும்.

நடிகையின் புதிய அந்தரங்கத்தை

தேநீர் விலையில் பறிமாறிக் கொள்வதும்

அடங்க மறுத்திடும்

காமக் கடும்பசிக்கு

பார்வையின் ஊடே

கூடு பாய்ந்து பசியாறுவதும்

காதலின் புதிய கணக்கை

கடக்க நேரிடுபவர்களின்

மீது திணிப்பதும்

பொதுவான ஒரு வியாதி

இருக்கத்தான் செய்கிறது

எல்லாரிடத்திலும்.

-. லட்சுமணன்.



(வாராவாரம் தொடரும்)

5 comments:

premraj said...

Very though provoking. Good collection... update more dear!!

Anonymous said...

அருமை அருண்..உண்மையை எழுதியிருக்கிறாய்...

அருண் பிரபு said...

@ ப்ரேம் அண்ணா: நன்றி அண்ணா..
@ படைப்பாளி: நன்றி அண்ணா..

drrsk1974 said...

fine arun fantastic keep it up .wright many more. valthukal

அருண் பிரபு said...

@ drrsk: ரொம்ப நன்றி.. உங்கள பற்றி தெரிஞ்சு கொள்ள முடியுமா?!